Tuesday, August 12, 2014

நைஜீரியாவில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
 
எபோலாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்கிய செவிலிக்கு எபோலா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு, கையுறை உள்ளிட்ட பொருட்களை சீனா அரசு வழங்கியுள்ளது.

கினி, சியரா லியோன், லைபீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில மாதங்களாக எபோலா வைரஸ் பரவி வருகிறது. ஆயிரம் பேர் வரை இதற்கு பலியாகியுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment