Saturday, February 22, 2014


புது டெல்லி :  குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை பொய்யர் என  மாயாவதி கூறியுள்ளார்.
நாடா|ளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த மாயாவதி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "நரேந்திர மோடி ஒரு பொய்யர். அவர் சொல்லும் எதிலும் உண்மை இல்லை. மக்களை தவறாக வழி நடத்தும் மோடி பிரதமராக வரக் கூடாது.  
மோடி ஆட்சிக்கு வந்தால், மதவாத சக்திகள் நாட்டில் வலுப்பெறும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நம்பகத்தன்மையற்ற பாஜக சொல்வது ஒன்று. செய்வது ஒன்று.  எனவே, மோடி பிரதமராவதைத் தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும்" என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment