Tuesday, February 18, 2014

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:17.02.2014 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் சார்பில் அனுமதி பெற்று நடைபெற்ற ஊர்வலத்தை திடீரென காவல்துறை அனுமதி மறுத்து தடைசெய்தது பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியை சீர்குலைக்கும் நோக்கோடு விஷமிகள் சிலர் கல்லெறிந்துள்ளனர். காவல்துறை ஊர்வலத்தின் மீது நடத்திய தடியடி தாக்குதலால் 9க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜனநாயக நாட்டில் வன்முறையை தூண்டும் நோக்கம் இல்லாமல் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவது ஜனநாயக உரிமையாகும். அதனை தடுப்பதும் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தும் வகையில் தடியடி நடத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே, இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய ஊர்வலத்தில் தடியடி தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

0 comments:

Post a Comment