Monday, March 17, 2014

பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பட்டு, காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.கூடுதல் நேரம் : பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7–ந்தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில், ஓரே கட்டமாக ஏப்ரல் 24–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் கமிஷன், நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய சட்டசபைகளுக்கும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கும் புதிய ஓட்டுப்பதிவு நேரம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

0 comments:

Post a Comment