மும்பை,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7–ந்தேதி மாயமாகிவிட்டது. அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரிய வில்லை.மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும் விமானம் பற்றிய தகவல் தெரியவில்லை.தென் சீன கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில் அந்தமான் நிகோபர் பகுதியில் விழுந்திருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்தது. எனவே, தேடும் பணியில் இந்தியா உதவியை மலேசியா நாடியது. அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6 போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம் அந்தமான் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.அங்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் இந்திய கடற்படை, விமானப்படை மற்றும் கடல் ரோந்து படையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், மாயமான விமானம் கடத்தட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், விமானத்தின் தெடர்பு திட்டமிட்டே துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, விமானத்தை தேடும் பணியை இந்திய கடற்படை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தகவலை தெரிவித்த இந்தியா ராணுவ செய்தி தொடர்பாளர் ஹர்மீத் சிங் ,விமானத்தை தேடும் பணி முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மலேசியாவிடம் புதிய வழிமுறைகளுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment