
- Shaikh Al-Arifi“ ஸஃபானின் ஆரம்பத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உலக இஸ்லாமிய அறிஞர்களின் மாநாடு நடந்தது. இதில் 500 கும் மேற்பட்ட முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பங்கேற்றிருந்தனர். 50 நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தனர். அந்த மாநாட்டின் பேச்சு பொருளாக “சிரிய உள்நாட்டு யுத்தம்” அமைந்திருந்தது.
65 இஸ்லாமிய அமைப்புக்கள் அந்த மாநாட்டை பிரதிநிதித்துவபடுத்தின. யூசுப் அல் கர்ளாவி யின் IUMS (World Scholars Association), ஷேய்ஹ் முஹம்மத் அல் ஆரிபின் Ittihad ‘Nature Lidhuat (Die Bonding International), ஷேய்ஹ் அல் அமீன் அல் ஹஜ் அவர்களின் Rabithah Muslim Scholars (Deeds of Muslim Scholars) போன்றன இதில் பிரபலமானவை.
இந்தோனேஷியாவில் இருந்து இந்த மாநாட்டிற்கு சென்றிருந்த Zainuddin அது பற்றி விவரிக்கையில், “மாநாட்டில் Shaikh Al-Arifi மிகவும் உணற்ச்சிகரமாக உரையாற்றினார். அரபு தலைவர்களை மிகவும் காரசாரமாக விமர்சித்தார்.
“உங்களால் எம் சிரியா சகோதரர்களிற்கு உதவ முடியவில்லையா?, பரவாயில்லை. எம் அராபிய மக்களையாவது அந்த சகோதரர்களிற்கு உதவ அனுமதியுங்கள். நாளை புதை குழியில் சிரியா மக்களிற்கு உதவ தடை செய்தமைக்காக நீங்கள் துன்புறுத்தப்படுவீர்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார் அல் ஆரிப்.
மேலும் அவர் “ சிரிய மக்களிற்கு உதவுதல் என்பது அமெரிக்கா சொல்லித்தரும் வழிகளில் அல்ல. அது உதவியும் அல்ல. இஸ்லாம் சொல்லித்தரும் வழிகளில் அந்த உதவி அமைய வேண்டும்” என விமர்சனம் செய்துள்ளார். “முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் தேசத்து மக்களை சிரிய முஸ்லிம்களை பாதுகாக்கும் விதமாக ஜிஹாத் பீ ஸபீல் புரிய அனுமதிக்க வேண்டும்.
இதில் தாமதம் கூடாது” என வலியுறுத்தியும் உள்ளார். “ஆயுதங்களை கையில் எடுத்த நிலையில் முஸ்லிம்கள் சிரிய முஸ்லிம்கள் ஜிஹாத் களத்தை நோக்கி விரைய ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும்.
சிரியாவில் நடக்கும் அநியாயங்களிற்கான பதிலை அந்த முஸ்லிம்கள் அளிப்பார்கள். இஸ்லாமிய சிரிய தேசம் இதில் மலரும்” எனவும் முழங்கியுள்ளார் ஷேய்ஹ். இந்த வார்த்தைகளே சவுதி அரேபிய
ஆட்சியாளர்களை வெகுளச்செய்தது. அவரை சிறையில் அடைத்தது. (2013)
0 comments:
Post a Comment