நகர்ப்புறங்களில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இனிமேல் மாதத்துக்கு 2 முறை மட்டுமே வேறு வங்கியின் ஏ.டி.எம்.களில் இலவசமாக பணம் எடுக்க முடியும் என்றும், அதே நேரத்தில் கிராமப்புறங்களில் 5 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆட்டோமேடிக் டெல்லர் மெஷின் எனப்படும் ஏ.டி.எம்.கள் வந்தபிறகு, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுலபமாகி விட்டது. பணம் எடுக்க வேண்டுமானால் வங்கிகளுக்கு செல்லும் காலம் மறைந்து விட்டதோடு, இப்போது தெருவுக்கு இரண்டு, மூன்று ஏடிஎம்கள் வந்துவிட்டன.
ஏ.டி.எம்.கள் அறிமுகம் செய்யப்பட்டபோது அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இருந்த கட்டுப்பாடு கடந்த 2009ஆம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், ஏ.டி.எம்.களை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினர். சில குறிப்பிட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் சீக்கிரம் காலியாக தொடங்கியதால் அதன் ஏ.டி.எம்.களில் பணம் வைப்பதற்கான செலவு அதிகரிக்க தொடங்கியது.
மற்ற வங்கியின் ஏ.டி.எம்.மை பயன்படுத்தும் போது ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.18ஐ சம்பந்தப்பட்ட வங்கிகள் அடுத்த வங்கிக்கு கொடுத்து வந்தன. இதனால் அடுத்த வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து, அடுத்த வங்கி ஏ.டி.எம்.மை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியை, வங்கிகள் கேட்டுக் கொண்டன.
இதையடுத்து, ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக அடுத்த வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்தலாம் என கட்டுப்பாடு விதித்தது ரிசர்வ் வங்கி. அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வாடிக்கையாளர் கணக்கில் வங்கிகள் பிடித்தம் செய்யும். சில ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள அடுத்த வங்கி ஏ.டி.எம்.களை மாதத்துக்கு இருமுறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் தொடர்ந்து 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்.கள் தெருவுக்கு தெரு உள்ளன. ஆனால் சில வங்கிகளின் ஏ.டி.எம்.களை தேட வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பும் எனத் தெரிகிறது.
ஆட்டோமேடிக் டெல்லர் மெஷின் எனப்படும் ஏ.டி.எம்.கள் வந்தபிறகு, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுலபமாகி விட்டது. பணம் எடுக்க வேண்டுமானால் வங்கிகளுக்கு செல்லும் காலம் மறைந்து விட்டதோடு, இப்போது தெருவுக்கு இரண்டு, மூன்று ஏடிஎம்கள் வந்துவிட்டன.
ஏ.டி.எம்.கள் அறிமுகம் செய்யப்பட்டபோது அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இருந்த கட்டுப்பாடு கடந்த 2009ஆம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், ஏ.டி.எம்.களை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினர். சில குறிப்பிட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் சீக்கிரம் காலியாக தொடங்கியதால் அதன் ஏ.டி.எம்.களில் பணம் வைப்பதற்கான செலவு அதிகரிக்க தொடங்கியது.
மற்ற வங்கியின் ஏ.டி.எம்.மை பயன்படுத்தும் போது ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.18ஐ சம்பந்தப்பட்ட வங்கிகள் அடுத்த வங்கிக்கு கொடுத்து வந்தன. இதனால் அடுத்த வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து, அடுத்த வங்கி ஏ.டி.எம்.மை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியை, வங்கிகள் கேட்டுக் கொண்டன.
இதையடுத்து, ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக அடுத்த வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்தலாம் என கட்டுப்பாடு விதித்தது ரிசர்வ் வங்கி. அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வாடிக்கையாளர் கணக்கில் வங்கிகள் பிடித்தம் செய்யும். சில ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள அடுத்த வங்கி ஏ.டி.எம்.களை மாதத்துக்கு இருமுறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் தொடர்ந்து 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்.கள் தெருவுக்கு தெரு உள்ளன. ஆனால் சில வங்கிகளின் ஏ.டி.எம்.களை தேட வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment