
கிரையப்பத்திரத்தின் முக்கியத்துவ ம்
சொத்துக்கு உரிமை கொண்டாடும் முக்கிய ஆணவங்களில் முதன்மை யானது கிரையப் பத்திரம். அதில் தான் சொத்து பற்றிய அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும். சொத்துக்கான
சர்வே எண், பதிவு எண், யாருடைய பெயரில் சொத்து இருக்கிறது? அது வாங்கப்பட்ட ஆண்டு, சொத்தின் எல்லை அளவுகள் உள் ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இரு க்கும். அதன் மூலமாக தான் சொத்து நமக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த முடி யும்.
நகல் பத்திரம்
பிறருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் சிக்கல்இன்றி பரிவர்த்தனையை மேற் கொள்ள முடியும். ஆதலால் கிரை யப்பத்திரத்தை பாதுகாப்பாக வை த்திருக்க வேண்டியது அவசியம். அது தொலைந்துபோனால் சொத் து நமக்குரியதாக இருந்தாலும் சொந்தம் கொண்டாட முடியாத நி லை ஏற்படும். மீண்டும் சார்பதிவா ளர் அலுவலகத்தில் விண்ணப்பி த்து நகல் பத்திரம் வாங்க வேண்டி இருக்கும்.
நகல் பத்திரம் பெறுவதற்கான சில நடைமுறைகள்
அதற்கும் சில நடைமுறைகள் இரு க்கின்றன. முதலில் கிரையப்பத்திரம் தொலைந்து போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வே ண்டும். அதற்கு கிரையப் பத்திரத்தின் பதிவு எண், அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து விவரங்கள் பற் றிய தகவல் தெரிந்திருக்க வேண்டு ம். பத்திரத்தின் நகல் (ஜெராக்ஸ்) இ ருந்தால் அதன் மூலமாக புகாரில் விவரங்களைக் குறிப்பிட்டு விட லாம்.
சிரமங்களைச் சந்திக்கநேரும்
ஆனால் ஜெராக்ஸ் இல்லாமல் இருந்தால் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கு ம். ஏதாவது ஒரு நோட்டில் கிரைய பத்தி ரத்தில் இருக்கும் எண்கள், விவரங்களை குறிப்பிட்டு வைத்திருந்தால் அதன் மூலம் புகார் கொடுக்க ஏதுவாக இருக்கும். அப்ப டி எழுதி வைக்காத பட்சத்தில் கிரையப் பத்திர நகலை பெறுவதற்கு பல்வேறு சிர மங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சொத்தின் சர்வே நம்பராவது மனதி ல் பதிந்திருந்தால் அதன் மூலம் புகார் செய்ய முதல்கட்ட நடவடிக் கையாவது எடுக்கலாம்.
அதுவும் தெரியாதபட்சத்தில் சிக்கலை எதிர் கொள்ளவேண்டியிருக்கும். ஏனெனில் காவ ல் நிலையத்தில் கிரையப் பத்திரம் தொலை ந்து விட்டதாக புகார் தெரிவித்தால்தான் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர நகலை எளிதாக பெற முயற்சிக்க முடியும். அத்துட ன் பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் தெரிந்தால் தான் எளி தாக கிரையப் பத்திர நகலை பெற முடியும்.
கேள்விகள் எழும்
ஏனென்றால் 1987–ம் ஆண்டுக்கு முன்பு சொத்து வாங்கப்பட்டு இருந்தால் கணிணி மூலம் பத்திர நகலை பெறுவது இயலாது. அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இ ருக்கும் பழைய ஆவணங்களை தேடி பிடித் து அதன் மூலமே நகல் பத்திரம் பெறுவதற்கு நடவடிக்கை எடு க்க முடியும் என்பதால் காலதா மதத்தை எதிர்கொள்ள வேண் டியிருக்கும்.
அப்படியே நகல் கிரையப் பத்தி ரத்தை வாங்கினாலும் அதனு டன் பல்வேறு கேள்விகளும் எழுந்து நிற்கும். அதிலும் சொ த்தை விற்பனை செய்வதாக இருந்தால் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். உண்மையிலேயே கிரையப் பத்திரம் தொ லைந்து விட்டதா என்பதுதான் முதல் கே ள்வியாக இருக் கும். ஏனெனில் கிரையப் பத்திரத்தை வேறு யாரிடமாவது அடமா னம் வைத்து பணம் வாங்கி இருக்கிறார் களா? என்ற சந்தேகத்தை வரவழைப்ப தாகவே இருக்கும்.
பாதுகாக்க வேண்டும்
பிறரிடம் அடமானம் வைத்தது பற்றி சார் பதி வாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் அது வில்லங்க சான்றிதழில் தெரி யாது என்பதே சந்தேகத்துக்கு காரணமாக அமையும். அதனால் நகல் கிரையப்பத்திரம் வைத்திருக்கும் சொத்தை விற்பனை செய்வ து சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். சொத் து தங்களுடையது தான் எனத் தெரிந்தும் கிரையப்பத்திரம் தொலைத்து போனால் விற் பனை செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.
கிரையப் பத்திரத்தில் இருக்கும் விவ ரங்கள் நினைவில் இல்லாத பட்சத் தில் எதுவும் செய்ய இயலாத நிலை தான் ஏற்படக்கூடும். ஆகவே கிரைய ப்பத்திரத்தை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். அதை நகல் (ஜெ ராக்ஸ்) எடுத்து வைத்திருக்க வேண் டியதும்முக்கியம். அத்துடன் கிரை யப் பத்திர விவரங்களை முக்கிய மான நோட்டுகளில் எழுதி வை த்துக் கொள்வதும் நல்லது. அது பற்றிய விவரங்களை வீட்டில் உள் ளவர்களிடம் தெரியப்படுத்தி விடு வதும் பிற்காலத்தில் உபயோகமா னதாக இருக்கும்.
0 comments:
Post a Comment