அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) லெப்பைக்குடிக்காடு கிளை மற்றும் லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 13-12-2014 அன்று அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09:30 மணிமுதல் மதியம் 01:00 மணிவரை நடைபெற்றது. 80 பேர் கலந்து கொண்ட இம்முகாமில் ஆண்கள் 54 பேரும் பெண்கள் 13 பேருமாக 67 பேர் குருதி கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹுவின் உதவியால் இரத்ததானத்தில் தொடர்ந்து தமிழகத்தில் பல வருடங்களாக முதலிடம் பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்தானத்தில் சாதனை படைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
”ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லாம் மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்” அல் குர்ஆன் 5:32












0 comments:
Post a Comment