K. சுவர்ண லஹரி என்கிற ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி , ஏதோ ஒரு உந்துதலால் குர்ஆன் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கி இருக்கிறது இதனை கவனித்த அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் இச்சிறுமியின் ஆர்வத்திற்கு உதவியுள்ளார்கள் . இதன் விளைவாக மிக சரளமாக குர்ஆன் ஓத கற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமால் குர்ஆன் ஓதுதல் போட்டியில் கலந்து கொண்டு மிக சிறப்பாக ஓதி பார்வையாளர்களாக இருந்த முஸ்லிம்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் , மற்றும் அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் மேலும் இவருக்கு சிறப்பு பரிசும் அளிக்கப் பட்டுள்ளது . இவரது பெற்றோர்கள் இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மக்களுக்கிடையில் மதம் , மற்றும் மத நம்பிக்கைகள்ஒரு தடையாக இருக்க கூடாது என இச்சிறுமியின் அப்பா துர்கா பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவரது அம்மா சுஜாதா அவர்கள் மகளை நினைத்து பெருமிதம் அடைந்துள்ளார்கள் சிறுமி K. சுவர்ண லஹரி இனியும் குர்ஆனை ஓதுவதோடு இதன் அர்த்தங்களையும் புரிந்து கொள்வதற்கு முயற்ச்சி செய்வேன் என மகிழ்ச்சியாக சொல்லியுள்ளார் . தனது ஆர்வத்தை செம்மைப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டு வந்தது தந்து ஆசிரியர்கள்தான் என மிகுந்த சந்தோஷத்துடன் சொன்னார் .
” அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் “ இச்சிறுமிக்கும் , இவரின் பெற்றோர் , மற்றும் உறவினர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நேர்வழியை கொடுப்பானாக என இந்தருணத்தில் துஆ செய்வோம் ..
யா அல்லாஹ்! ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு இச்சிறுமியையும் , இவரின் பெற்றோர்களையும் , உறவினர்களையும் அழகு படுத்துவாயாக! மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் இவர்களை ஆக்கியருள்வாயாக!

0 comments:
Post a Comment