Thursday, March 27, 2014

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வுதமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 31 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 416 மாணவ மாண விகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 5 ஆயிரத்து 503 பேர்மாணவர்கள் 3ஆயிரத்து 913 பேர் மாணவிகள் ஆவர். இதில் 506 பேர் தனித் தேர்வர்கள் ஆவர்.தேர்வு நடத்தப்படும் அனைத்து மையங்களிலும் மாணவ. மாணவிகளுக்கு தேவையானஅனைத்து அடிப் படை வசதிகளும,¢ பாதுகாப்பு ஏற்¢பாடுகளும் செய்யப்பட் டுள்ளது.பறக்கும் படைமாணவ, மாணவிகளை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் பறக்கும் படையை சேர்ந்த இரண்டு நபர்கள் என 75 பேர் பறக்கும் படை அலுவர்களாகவும், 8 பேர் வழித்தட அலுவலர் களாகவும் நியமிக்கப் பட் டுள்ளனர். பெரம்பலூர் மாவ ட் டத்தில் தேர்வு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.நேரில் ஆய்வுஇதனை தொடர்ந்து குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களுக்கு கலெக்டர் தரேஸ் அஹமது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

0 comments:

Post a Comment