Tuesday, June 24, 2014

அலஸ்காவின் லிட்டில் சிட்கின் தீவுப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.0ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் அளவு அதிகமாக இருப்பதால், அலாஸ்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் 71 மைல்கள் ஆழத்தில் இருந்ததால், சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை குறைக்கப்பட்டது. அடாக் நகரத்தில் உள்ள சுமார் 150 குடும்பத்தினர் உயரமான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

0 comments:

Post a Comment