Wednesday, July 23, 2014

பலஸ்தீனின் மேற்குக்கரை நகரில் அமைந்துள்ள herbon இல் இஸ்ரேலிய குடியேற்ற தொகுதியான   kiyratarba வின் பிரதம யூத மத அறிஞரான Rabbi DovLior என்வர் காஸாவை அழித்து அம்மக்களை கொன்றொழித்து விடுமாறு மாரக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளார். இவர் வசிக்கும் சட்டரீதியற்ற இந்த குடியேற்றப் பகுதி யூத மதத்தின் முக்கிய பிராந்தியமாக கருதப்படுகின்றது.
அவர் தனது மார்க்கத் தீர்ப்பை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்: 'தற்போது யுத்தம் நடைபெறும் பகுதியில் தொடர்ந்து யுத்த சூழலை கடைப்பிடிப்பது அனைத்து யூதமக்களினதும் கடமையாகும். இக்கடமையில் யாருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லை.
இஸ்ரேலில் யூத மத விவகாரங்களுக்கு பெயர் போன ஊடக நிறுவனமான  kikarhashmat இன் கருத்துப்படி இந்தத் தீ
ர்ப்பு  இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான Ya’alon இற்கு கடந்த திங்கட் கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 Rabbi DovLior தனது தீர்ப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது: 'எமது கடந்த அனுபவங்கள் எமது வாழ்க்கைக்கு வழிகாட்டி. நாம் போர் களத்தில் எவ்வாறுசெயற்பட வேண்டுமென கற்றுத் தருகிறது. குறிப்பிட்ட நகரத்தாரை (காஸா மக்களை) தண்டிப்பதுவோ,அவர்களுக்கான வாழ்வாதாரத்தை துண்டிப்பதுவோ எமது எந்தவொரு படை வீரரையும் பாதிக்கக்கூடாது' என்றார்.

மேலும் இந்த காஸா விவகாரம் சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சு எமதுபடையினர் எவ்வாறு போராடவேண்டும்,தமது தாக்குதலை எவ்வாறு அமைத்து கொள்ள வேண்டும் என்ற ஒருவழிகாட்டலை வழங்கவேண்டும். அப்போதுதான் எமது தெற்கு பிராந்தியத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க முடியும்' என்றார்.


தமிழில் - உஸாமா ஹனஸ்

0 comments:

Post a Comment