Friday, January 30, 2015

அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)...

வி.களத்தூர் சங்கமம் 2015 அழைப்பிதழ்!

வி.களத்தூர் சங்கமம் 2015 வரும் பிப்ரவரி 6ம் தேதி  முஸ்ரிப் பார்க்கில் நடைப்பெற உள்ளது.

இந்த ஒப்பற்ற ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு அமீரகத்தில் பணிபுரியும் வி.களத்தூர்,மில்லத் நகர் பகுதி மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள  வேண்டும் என அன்புடன்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நமதூர் மக்கள் இந்த அமீரகத்தில் பணிபுரிய தொடங்கி சுமார்   40 வருடம் ஆகிறது. அமீரகத்தின் பல மாநிலங்களில் பணிபுரியும் நமது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்களையும் ஒரே இடத்தில் சந்தித்து தமது சந்தோஷங்களை பகிர்ந்துக்கொள்ளும் விதமாக இந்த சங்கமம் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சிக்கென்று தனியாக ஒரு குழுவை அமைத்து சங்கமம் நிகழ்ச்சிக்கான வேலைகளை செய்து வருகிறார்கள்.

மேலும் இந்தச் செய்தியை பார்ப்பவர்கள் அனைவர்களும் இணையதளத்தை பார்க்க இயலாத அனைவருக்கும் தெரியப்படுத்தி அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சங்கமம் நிகழ்ச்சி இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைப்பெறும் என்றும் அதில் அனைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சங்கமம் நிகழ்ச்சிக்க வருபவர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள், முன்பதிவு செய்தவர்கள் கட்டாயமாக கலந்துக் கொள்ளுங்கள் என்று சங்கமம் விழாக்குழு தலைவர் H. சர்புதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முன்பதிவு செய்பவர்கள் வரும்  புதன்கிழமை (04-02-2015)   முன்பதிவு செய்துக்கொள்ளும் படி கூறியுள்ளார்.

முன் பதிவுக்கு கீழ் காணும் சகோதர்களை தொடர்பு கொள்ளவும்..

துபாய்:
H.ஷர்புதின்           -      055-2639174.A.
அப்துல் சலாம்  -     055-1153584.
G.நெளஷாத்          -      055-9842400.
S.அபு(அபு பக்கர்)   -     050-3721147. 


அபுதாபி:
K. அப்துல் ஹக்கீம்     - 055-9394304.

ஷார்ஜா :
A.ஷேக் தாவூத்           - 050-9469199.

ராசல் கைமா:
K.முஹம்மது பாருக்    -050-5304362.

இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பழைய தமிழ் ரெஸ்டாரண்ட் அருகில் இருந்து வெள்ளிக்கிழமை காலை சரியாக 8 மற்றும் 8:30 மணிக்கு பஸ் புறப்பட இருக்கிறது எனவே அனைவரும்    அந்த நேரத்திற்கு  வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.

தகவல் - S.பைஜுர் ரஹ்மான்,  vkalathur.in

0 comments:

Post a Comment