Friday, July 4, 2014

5 ஆயிரம்  வருட பாரம்பரியம்  கொண்ட  இக்கிணற்று  நீரை,  உலகில்  வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள்  இந்த நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்காவிற்கு புனித பயணம்  செய்யும்  உலகில் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள்  இந்த  கிணற்று  நீரை குறைந்தது 20 லிட்டராவது நீர் எடுத்து தனது நாட்டிற்கு  கொண்டு  செல்லாமல்  இருக்க  மாட்டார்கள்.
அப்படிபட்ட அற்புதமான  இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.  ஆழம் : 30 மீட்டர், வீதி 11.08 அடி, ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர்….பம்ப் செய்யும். மணிக்கு 2 கோடி 880 லட்சம்  லிட்டர்கள்.  ஒரு மாதம் 2073  கோடியே  60  லட்சம் லிட்டர்கள்.
ஒரு லிட்டர்  தண்ணீரி ல் அடங்கியுள்ள மூலதனங்கள்….
சோடியம் – 133.00ml,   கால்சியம் – 096.00ml, மேக்கனிசியம் – 038.80ml, புளோரைட் -000-77ml,  பொட்டாசியம் – 043.03ml, நைட்ரேட் – 124.08ml,  டைகார்ப்நெட் – 124.00ml,  சல்ஃபேட் – 124.00ml,
சென்ற நூற்றாண்டில்,ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள்,சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை  சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8  அதி நவின  ராட்சதபம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,  பகலுமாக  15 நாட்கள்  இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம்  உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில்,  தினமும் 691.2  மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி  ராட்சத மோட்டார்கள்  மூலம் இந்த கிணற்றுத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில் இருந்து எடுக்கப்படுவது மிகப்பெரிய அதிசயம். அதை விட அதிசயம்  691.2  மில்லியன் நீரை தினமும் எடுத்தும், அப்போதும் இதன்அளவு குறைவதில்லை.  சுவையும் மாறியதில்லை.
ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும்  20  லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச்செல்கிறார்கள். குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ள  இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக்கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது  என்பது  முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய்விடும்.  ஆனால்  இந்த ஊற்று பலஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும். ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை. எந்த ஒரு நீர்  நிலையாக  இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும்  இயற்கை.
இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம் ஜம்  தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல்  தன்னைத்  தானே  பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின்  முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர்  1971  ஆம் ஆண்டு  ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்டபோது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.
பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம் ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில்  தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை.  இதை  அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு  உள்ளது.  இது கிருமிகளை அழிக்க வல்லது.
தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள்  நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு   நிரூபிக்கப்பட்டு  உள்ளதால்  இது  மெய்யான  அற்புதமாகும்....

0 comments:

Post a Comment